சர்ச் என்ற பெயரில் விபச்சாரம்... தனிமையில் இருந்த ஜோடிகள்.. கட்டு கட்டாக காண்டம்!! சிக்கிய பாதிரியார்!!

இளம் பெண்ணை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்..!

சர்ச் என்ற பெயரில் விபச்சாரம்... தனிமையில் இருந்த ஜோடிகள்.. கட்டு கட்டாக காண்டம்!! சிக்கிய பாதிரியார்!!

கேரளாவில் பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளுக்கும், தேவாலயம் வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து கைதாவது சகஜமான ஒன்று. 28 ஆண்டுகளாக நடந்து வந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கை நாம் அனைவரும் மறந்து விட முடியாது. அதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது என பல கொடுமைகளை நாம் கண்டிருக்கிறோம். அதேபோல சம்பவம் கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியாக தமிழ்நாட்டிலும் ஊடுருவி உள்ளது. 

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். எஸ்.டி.மங்காடு பகுதியில் இயங்கி வருகிறது பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற தேவாலயம். 

மத போதகராக லால் ஷைன் சிங் தனக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் இந்த தேவாலயத்தை நடத்தி வந்துள்ளார். அனைவராலும் மதிக்கத்தக்க வகையில் இருந்து வந்த இவர், தன் வசம் இருந்த சொகுசு பங்களாவை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

எப்படி ஒரு மத போதகர் இத்தகைய செயலில் ஈடுபட முடியும்? என்ற எண்ணம் எழுகிறதா? சிலருக்கு வேண்டுமென்றே மத போதகர் மீது பழி போடுவதாக கூட எண்ணலாம். ஆனால் மத போதகர் என்ற போர்வையில் யாருக்கும் தன் மேல் சந்தேகம் வராதபடி ஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார் லால் ஷைன் சிங்..

தேவாலயத்தில் எவ்வித பிராத்தனைகளும் முறையாக நடைபெற்றதில்லை. பதிலாக அரைகுறை ஆடையுன் இளம் வயது முதல் 50 வயது வரையான பெண்களும், ஆண்களும் அவ்வப்போது காரில் வந்து செல்வதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து லால் ஷைன் சிங் சொகுசு பங்களாவில் நடத்தி வந்த தேவாலயத்தில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டுள்ளனர் போலீசார். அப்போது அங்கு பல அறைகளில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த அதிகாரிகள், மத போதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த லால் ஷன் சிங் உடன் சேர்த்து இரண்டு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லால் ஷைன் சிங், ஷிபின் இருவரும் இணைந்து அப்பகுதி பெண்களின் ஒத்துழைப்போடு பாலியல் தொழிலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அப்பகுதி பெண்களான ராணி, சுகந்தி ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இளம் பெண்களை இங்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்த கும்பலில் சிக்கிய 19-வயது இளம் பெண்ணை, அவரது தாயே பாலியல் தொழிலுக்கு தள்ளியது தான். 

விசாரணைக்கு பிறகு 7 பேரையும் சிறையில் அடைத்தனர் போலீசார். மன நிம்மதிக்காக மக்கள் செல்லும் இடங்கள் தான் கோவில், தேவாலயம், மசூதி போன்ற கடவுள்களுக்கான இடங்கள். ஆனால் இதனை இப்படி தவறான வழிகளில் பயன்படுத்தியதை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...