மனைவி கண்முன்னே இளம் பெண்களுடன் அரைநிர்வாண வீடியோ கால்... தட்டிக்கேட்டதால் சைலண்ட்டாக கதையை முடித்த கொடூரம்....!

சென்னை அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

மனைவி கண்முன்னே இளம் பெண்களுடன் அரைநிர்வாண வீடியோ கால்... தட்டிக்கேட்டதால் சைலண்ட்டாக கதையை முடித்த கொடூரம்....!

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி ஹேமாவதி , இவர்களுக்கு கடந்த 2015=ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான 6 மாதத்தில் இருந்தே கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கூட காவல் நிலையத்தில் இவர்களுடைய பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சமாதானம் செய்து காவல்துறை அனுப்பியுள்ளனர். அதன் பிறகு ஹேமாவதி தன்னுடைய கனவணனின்  செல்போனை எடுத்து பார்க்கும் போது வினோத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக வினோத் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசுவதும் அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதும் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகமாகி போகவே, நேற்று மதியம் 12 மணி அளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து ஹேமாவதியின் வீட்டிற்கு சென்ற அவரது அண்ணனை, மயங்கி கிடந்த ஹேமாவதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறவே கீழ்ப்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக பேட்டி அளித்த ஹேமாவின் அண்ணன் ஜானகிராமன் கூறுகையில்.....

வரதட்சணை கொடுமையால் தனது தங்கையை அவரது கணவர் திருமணமான முதல் தொந்தரவு செய்து வந்ததாகவும், வினோத்திற்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் இதற்கெல்லாம் என் தங்கை உடந்தையாக இல்லை என்ற காரணத்திற்காக நேற்று கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், ஆர்.டி.ஓ அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகுதான் உண்மை என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.