சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.53 லட்சம் பறிமுதல்!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 53 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.53 லட்சம் பறிமுதல்!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடமைகளை  போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய ஒரு நபரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அந்த நபரிடம் இல்லாத நிலையில், அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அவர் கொண்டு வந்த 53 லட்சம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த யுகந்தர் என்பது தெரியவந்ததுஇ இதையடுத்து  அவரையும் பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ரயில்வே பாலீசார் ஒப்படைத்தனர்.