தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள்.. கவுரவக் கொலை செய்யப்பட்டனரா? - போலீசார் விசாரணை

மதுரை அருகே காதல் ஜோடிகள் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள்.. கவுரவக் கொலை செய்யப்பட்டனரா? - போலீசார் விசாரணை

கச்சிராயிருப்பு பிரிவு மலைகாலனி பகுதியை சேர்ந்தவர் லோகபிரபு. இவரும்  துவரிமான் காலனியைச் சேர்ந்த துர்காதேவி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் யாருக்கு தெரியாமல் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து லோகபிரபுவின் தோட்டத்தில் உள்ள வீட்டில் காதல் ஜோடிகள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதல் ஜோடிகள், கவுரவக் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்துகொண்டனரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.