சென்னை அருகே வடமாநில கூலித் தொழிலாளி அடித்து கொலை.! 

சென்னை அருகே வடமாநில கூலித் தொழிலாளி அடித்து கொலை.! 

செங்குன்றம் அருகே வடமாநில கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயில் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர்  அரிசி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 80 பேர் பணிபுரிந்து வருகின்றானர். இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாந்துசோரன் என்பவர் ஆலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.