வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்...

வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்...

துரைப்பாக்கத்தில் வழக்கறிஞரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

சென்னை | பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், ஜெய்கஷை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். பின்னர் இச்சம்பவம் அறிந்து மருத்துமனைக்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com