பூட்டு திறக்கல... பீரோவும் உடைக்கல... அப்புறம் எப்படி நகை திருடு போச்சு! குழப்பத்தில் போலீசார்

பூட்டு திறக்கல... பீரோவும் உடைக்கல... அப்புறம் எப்படி நகை திருடு போச்சு! குழப்பத்தில் போலீசார்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் வீட்டில்  இருந்த 19 லட்சம் ரொக்கம் மற்றும் 16 சவரன் தங்க நாணயங்கள் கொள்ளை போனது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  

ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் வைத்துள்ளார்.  அவரது மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் அடிக்கடி அங்கு சென்று வந்த தங்கவேல், வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 19 லட்சம் ரொக்கம் மற்றும்  16 சவரன் தங்க நாணயங்கள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாததால் தங்கவேலுக்கு தெரிந்தவர்களே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.