பால் வியாபாரியை கொலை செய்த ரவுடிக்கு ஆயுள் தண்டனை...

வளசரவாக்கத்தில் முன் விரோதம் காரனமாக பால் வியாபாரியை கொலை செய்த வழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை

பால் வியாபாரியை கொலை செய்த ரவுடிக்கு ஆயுள் தண்டனை...

சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(35), பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் வளசரவாக்கம் நியூ பெத்தானியா நகரை சேர்ந்த கோபி (என்ற) கர்ணா(48) என்பவருக்கும்  இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 8-3- 2003 அன்று கோபி, வளசரவாக்கம் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வைத்து தட்சிணாமூர்த்தியை ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்தார்இந்த கொலை வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கோபி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கோபி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.

மேலும் படிக்க | ”இந்த மதத்தில் மதவெறி இல்லை எனவும் எதிரிகளை மட்டுமே உருவாக்கும் கடந்த காலத்தை தோண்டி எடுக்காதீர்கள்...”உச்சநீதிமன்றம்!!!

14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை பகுதியில் வைத்து வளசரவாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன்கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கோபிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தியின் மகன் ராமநாதன் பஹ்ரைனில் இருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசாரால் அழைத்து வரப்பட்டு சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஏன் அக்னிபாத்... வெளியில் வரும்போது 11 லட்சமா... மத்திய அரசு கூறுவதென்ன?!!