குடிபோதையில் போலீசாரை மிரட்டும் வழக்கறிஞர்... வைரலாகும் வீடியோ...
போலீசாரை மிரட்டும் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளில் பிரிந்து விடுவதில்லை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கொலை வழக்கில் செல்வம் என்பவருக்கு திருநெல்வேலி நீதிமன்றம், மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 1994ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுதுபார்க்கவும் 40 நாட்கள் விடுப்பு கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 29 ஆண்டுகளில் 15 முறை விடுப்பில் வெளி வந்துள்ளதாகவும், அந்த சமயங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறை நன்னடத்தை அதிகாரி, விடுப்பு வழங்கலாம் என அறிக்கை அளித்துள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே காவல் துறை பாதுகாப்புடன் 15 முறை உயர்நீதிமன்றம் விடுப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிறைக் கதவுகளின் முன், கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் பிரிந்து விடுவதில்லை எனக் கூறி, 40 நாட்கள் பாதுகாப்புடன் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், காவல் துறை பாதுகாப்புடன் வழங்கப்படும் விடுப்பு என்பது மனுதாரரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கருதக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: 2 வாரங்களுக்கு இபிஎஸ் பற்றி உதயநிதி பேசக் கூடாது!!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த செவிலியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி அவர்களின் தலைமையிலான மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், பாலாஜி அடங்கிய மருத்துவ குழுவினர் செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டில் தீடீர் சோதனை மேற்கொண்ட போது தர்மபுரி அழகாபுரியை சேர்ந்த சேர்ந்த கற்பகம் (வயது 38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பாலின பரிசோதனை மேற்கொண்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (வயது.35), தர்மபுரி ஆசிரியர் காலணியை சேர்ந்த இடைத்தரகர் சிலம்பரசன் (வயது 31) நல்லம்பள்ளி சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35) வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (வயது. 28) ஆகிய 5 நபர்களை பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காரிமங்கலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார் 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க || "நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பாஜக ஏற்றுக்கொண்டது" முதலமைச்சர் ஸ்டாலின்!!
ஊர்வலத்தில் ஆடிய நபரை, இந்து முன்னணியினர் கன்னத்தில் அறைந்து காலால் எட்டி உதைத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகரை சுற்றி வைக்கப்படிருந்த 42 விநாயகர் சிலைகள வாகனங்களில் எடுத்து வரப்பட்டு முருகன் கோவில் வாசலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. கோவில் முன்பு இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் கொடியசைத்து விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
ஊர்வலம் துவங்குவதற்கு முன்பாக பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விநாயகர் முன் அந்தந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக விநாயகரை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் மேடை முன்புறத்தில் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடிய நபரை இந்து முன்னணி நிர்வாகிகள் கன்னத்தில் அறைந்தும் காலால் மிதித்தும் தாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாக்கப்படும் நபர் அடி தாங்க முடியாமல், நிலைகுலைந்து அங்கேயே கீழே விழுகிறார்.
வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்த போதும் இச்சம்பவத்தை யாரும் கண்டு கொள்ளாது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க || "நீட் என்பது ஒரு மோசடி தகுதித் தேர்வு" வைகோ கண்டனம்!!
நடிகை விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றப் பின்னரும் வழக்கை நிலுவையில் வைத்தது ஏன் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நடிகை விஜயலட்சுமி வழக்கை திரும்பப் பெற்ற நிலையில் வழக்கை நிலுவையில் வைத்தது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
இதுத் தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 26 ஆம் தேதிக்க ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் எம்பிகளை குறைக்கும் பேராபத்து; முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை!
தமிழ்நாடு முழுவதும், மின்சார வாரியத்திற்கு உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் மற்றும் பிற உபகரணங்களை வழங்குவதில் தொடர்புடைய நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத் தரகர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா நகர், நீலாங்கரை, நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெறுகின்றன.
தேனாம்பேட்டையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டிலும், தியாகராய நகரில் பந்தாரி என்பவர் வீட்டிலும் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் மகேந்திரா பி.ஜெயின் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல்சாவடியில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலை 5 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மற்றும் மின் சாதனப் பொருட்கள் கொள்முதல் பணிகளில் ஈடுபட்டு வரும் ராதா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: அமைச்சா் உதயநிதியிடம் ரூ.25 லட்சம் வழங்கிய கால்ஸ் குழும தலைவர்!