பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல்...! பறிமுதல் செய்த போலீசார்...!

பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல்...! பறிமுதல் செய்த போலீசார்...!

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியில் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞரை போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த இளைஞர் பம்மதுகுளம் பகுதியை சேர்ந்த அருண் என்பதும் ஆந்திராவிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து ஒருவீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பம்மதுகுளம் சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டிலிருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அருணை கைது செய்த போலீசார் இந்த கடத்தலில் வேறு யாராவது சம்மந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : நாளை நடைபெறவுள்ள புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு...!