டேட்டிங்கிற்கு அழைத்த பெண்...உடலுறவின் போது ஆடவரை பலமுறை கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்...மர்மம் என்ன?

டேட்டிங் செய்வதாக கூறி வரவழைத்த நபரை பழிவாங்கும் நோக்கத்தில்  ஈரானிய இளம்பெண் கத்தியால் பல முறை குத்திய அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அரேங்கேறியுள்ளது.

டேட்டிங்கிற்கு அழைத்த பெண்...உடலுறவின் போது ஆடவரை பலமுறை கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்...மர்மம் என்ன?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வழியே ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதன்பின்னர் ஹெண்டர்சன் நகரில் உள்ள ’சன்செட் ஸ்டேசன்’ ஓட்டலில் சந்திக்கலாம் என இருவரும் முடிவு செய்தனர். அதன்படி ஓட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்த இரண்டு பேரும் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.  

அப்போது திடீரென விளக்குகளை அணைத்த அந்த பெண், அந்த நபரின் கண்களையும் துணியால் கட்டியுள்ளார்.  பின்னர் ஒரு சில நிமிடங்கள் கழித்து அந்த நபருக்கு கழுத்து பகுதியின் ஓரத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தனக்கு என்ன நடக்கிறது என உணர்ந்து கொண்ட அவர், நிக்காவை தள்ளி விட்டு விட்டு அவசர எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தப்பியோட முயன்ற  நிக்காவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து அந்தபெண் கூறும்போது, கிரேவ் டிக்கர் என்ற பாடலை கேட்ட பிறகே, பழிவாங்கும் தூண்டுதல் தனக்குள் ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, கடந்த 2020ம் ஆண்டில், அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில்,  ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்குவோம் என அடுத்த ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற இஸ்மயில் கானி சபதமேற்றார். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கவே, அமெரிக்கர் ஒருவரை டேட்டிங் என்ற பெயரில் அழைத்து, அந்த நபரை கத்தியால் குத்தினேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கர் ஒருவரை டேட்டிங் என்ற பெயரில் அழைத்து அவரை, ஈரானிய இளம்பெண் கத்தியால் குத்தி கொல்ல நடந்த முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.