பிரிந்து சென்ற மனைவி! துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த கணவர்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளை காண முடியாத ஏக்கத்திலும், பிரிந்து சென்ற மனைவி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாலும், மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்து சென்ற மனைவி! துக்கம் தாங்காமல் தற்கொலை செய்த கணவர்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகளை காண முடியாத ஏக்கத்திலும், பிரிந்து சென்ற மனைவி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாலும், மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒர் மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மகளை பார்ப்பதற்காக சென்ற ராதாகிருஷ்ணனை, மகளை பார்க்க விடாமல் தடுத்துள்ளார். மேலும் அவருக்கு வேறொரு திருமணமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.