மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்... மைத்துனரை கரண்ட் ஷாக் வைத்து கொன்ற அக்கா கணவர்...

மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரமடைந்து மைத்துனரை கரண்ட் ஷாக் வைத்து அக்கா கணவர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்... மைத்துனரை கரண்ட் ஷாக் வைத்து கொன்ற அக்கா கணவர்...

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது மிட்டாதார் குளம். மிட்டாதார் குளத்தில் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் பிரிட்டோ பணி குமார். பிரிட்டோ பனி குமாரின் மனைவி மரிய சோபா.

இதே ஊரில் வசித்து வரும்  டேவிட் ராஜா மரிய ஷோபாவின் சகோதரர். இவர் மீது பல வழக்குகள் உள்ளது. சம்பவத்தன்று இவர் தனது அக்காள் மரிய சோபாவிடம் 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. 30 ஆயிரம் ரூபாயை தரமறுத்ததால் மரிய சோபாவின் சேலையை டேவிட் ராஜா எரித்ததாக கூறப்படுகிறது.

சேலையை  எரித்ததால் ஆத்திரமடைந்த மரிய சோபாவின் கணவரும் டேவிட் ராஜாவின் மைத்துனருமான பிரிட்டோ பனிக்குமார் நேராக டேவிட் ராஜாவின் வீட்டுக்குச் சென்று நீ இருந்தால் தானே எங்களுக்கு பிரச்சனை எனக்கூறி அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் அவரது கைகளையும் கால்களையும் கட்டி டேவிட் ராஜாவின் உடம்பில் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மின்சார ஷாக் கொடுத்தும் டேவிட் ராஜா இறக்காததால் பின்னர் அருகிலிருந்த கேபிள் வயரை எடுத்து டேவிட் ராஜாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் டேவிட் ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனதாக  தெரிகிறது. இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை போலீசார் விசாரணை செய்து கொலைக் குற்றவாளியான பிரிட்டோ பனிக்குமாரை கைது செய்துள்ளனர்.