மதுபோதையில் தகராறு.. மனைவி மீது கணவன் வெறிச்செயல்

சென்னையில் குடும்ப தகராறு முற்றி, கணவன் சுத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுபோதையில் தகராறு.. மனைவி மீது கணவன் வெறிச்செயல்

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்த அர்சுதனன், தினமும் குடித்துவிட்டு அவரது மனைவி மனோபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அர்சுதனன், வழக்கம்போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த அர்சுதனன், தமது மனைவி என்றும் பாராமல், மனோபாரதியின் தலையில் சுத்தியலை கொண்டு பலமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மனோபாரதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அர்சுதனன் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.