மனைவியை பீர் பாட்டிலால் அடித்து கணவன் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை

மனைவியை பீர் பாட்டிலால் அடித்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மனைவியை பீர் பாட்டிலால் அடித்து கணவன் தப்பி ஓட்டம் - போலீசார் விசாரணை
Published on
Updated on
1 min read

சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட  சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தில்லைகங்கா பகுதியில்,  வசித்து வருபவர்  கமலக்கண்ணன்,  இவருக்கு திருமணமாகி வினிதா  என்ற மனைவி  உள்ளார். இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  வழக்கம்போல்  கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து  வினிதாவின் தலையில் அடித்துவிட்டு  தப்பி சென்று உள்ளார். தகவலின் போில் சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினா், வினிதாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் தப்பி ஓடிய கமலக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com