மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்பு.. பப்ஜி மதனின் ஜாமின் மனு தள்ளுபடி!!

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பப்ஜி மதனின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்பு.. பப்ஜி மதனின் ஜாமின் மனு தள்ளுபடி!!

ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின்க்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும் என மதன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன்,பப்ஜி மதனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமின் வழங்கினால், அவர் மீண்டும் இதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளதாக வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பப்ஜி மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.