போனிலிருந்து ஆதாரங்களை அழித்த முன்னாள் காதலன்... டென்ஷனில் ஆசிட் வீசிய டைவர்ஸ் ஆன பெண்...

கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றி, பண மோசடி செய்த முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி.

போனிலிருந்து ஆதாரங்களை அழித்த முன்னாள் காதலன்... டென்ஷனில் ஆசிட் வீசிய டைவர்ஸ் ஆன பெண்...

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோடிபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராகேஷும் , காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெயந்தியும் துபாயில் வேலை பார்த்து வந்தனர். அந்த ஜெயந்தி டைவர்ஸ் ஆனவர் என்பதால் இருவரும் துபாயில் கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

பிறகு அந்த ராகேஷ் தன் சொந்த ஊருக்கு அந்த ஜெயந்திக்கு தெரியாமல் வந்து, அங்கு வேறொரு பெண்ணை பார்த்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அந்த ஜெயந்தி துபாயிலிருந்து வந்து அந்த ராகேஷிடம் தன்னை ஏன் கல்யாணம் செய்யாமல் ஏமாற்றினீர்கள் என்று கேட்டு சண்டை போட்டார்.

இதனால் அந்த ராகேஷ் அந்த பெண்ணை கோயம்புத்தூருக்கு வர சொன்னார். அதை நம்பி அந்த பெண் அங்கு சென்று, அவரிடம் தன்னிடம் ஏமாற்றி வாங்கிய 18 லட்சம் பணத்தை கேட்டார். ஆனால் பணமில்லாத அந்த ராகேஷ் அந்த பெண்ணிடமிருந்து போனை வாங்கி அதிலிருந்த ஆதாரங்களை அழித்தார்.

இதனால் அந்த பெண் கோபமுற்று அந்த ராகேஷ் மீது ஆசிட் வீசினார். பின்னர் தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இப்போது இருவரும் ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.