பண்ணை தோப்பில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு!

முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்ணை தோப்பில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு!

திருவாரூர் | நாகப்பட்டினம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனை செய்யபோது காரைக்காலிருந்து நாகப்பட்டினம் கிழக்கு கடற்க்கரை சாலை வழியாக முத்துப்பேட்டைக்கு மீன் வண்டியில் மறைத்து கடத்தி சென்ற ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அரவிந்தன், தமிழரசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருநள்ளாறு அடுத்த அதிப்படுகை மேலத்தெரு பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சசிக்குமார்(44) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு கொண்டு சென்றதும் அங்கு போலி மதுபான ஆளை செயல்படுவதாகவும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

மேலும் படிக்க | தகாத உறவில் ஈடுபட்ட இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த உறவினர்கள்...

இதனையடுத்து திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, மதுவிலக்கு டிஎஸ்பி அப்துல் கபூர், முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீசார் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் உள்ள சாமிதுரை மகன் வீரசேகரன் என்பவருக்கு சொந்தமான பண்ணை தோப்பில் உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மிகப்பெரிய அளவில் போலி மதுபான ஆளை செயல்பட்டது கட்டுபிடிக்கப்பட்டது.

மேலும் படிக்க | ஒரு கள்ளக்காதலிக்கு ரெண்டு பேர் போட்டா போட்டி...

இதனையடுத்து போலீசார் அங்கிருந்து 1500 லிட்டர் பாண்டிச்சேரி மாநில கள்ளச்சாராயம், 4பெரிய பேரலில் சுமார் 500லிட்டர் ஸ்பிரிட், 5 கேனில் கலர் திரவியம், பெரிய பாத்திரங்களில் ஊறல்கள், 75மூட்டைகளில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள், 50காலி கேன்கள், 2ஆயிரம் அட்டை பெட்டி, 10மூட்டையில் பாட்டில் மூடி, 4பாட்டில் அடிக்கும் மிஷின், ஒரு மூட்டை ஸ்டிக்கர் அதுமட்டுமின்றி போலி மதுபானம் தயாரிக்க தேவையான மூல பொருட்கள், உண்மையான மதுபானம் போல் தெரிய அரசு முத்திரை லேபில், செல்லோ டேப், பெவிகுயிக் போன்ற பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கட்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து போலீசார் இடத்தின் உரியமையாளர் வீரசேகரன் என்பவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 20 ல்கிட்டர் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்த அதிகாரிகள்...