ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்த நபர்- மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாகக் கூறி எஸ்கேப்…  

சென்னையில் ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்து நூதன முறையில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 
ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்த நபர்- மனைவியிடம் காண்பித்து விட்டு வருவதாகக் கூறி எஸ்கேப்…   

சென்னையில் ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்து நூதன முறையில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 9 சவரன் நகைகளை அங்கத் மேத்தா என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் கொடுத்த நகைகளை கடை ஊழியர் கொண்டுவந்தபோது, மனைவியிடம் காண்பித்து வருவதாக கூறி மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அங்கத் மேத்தாவை தேடி வந்த தனிப்படை போலீசார், இன்று அவரைப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் உண்மையான பெயர், சர்தாக் ராவ் பாப்ராஸ் என்பதும், அந்தமானை சேர்ந்த இவர், சென்னையில் ஹோட்டல் அறையில் தங்கி இது போன்று நூதன திருடில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அவரிடமிருந்து, ஏழரை சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com