பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
சென்னை | தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் 61 வயதான லக்ஷ்மி நாராயணன். இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டின் வெளியில் புதிதாக சிசிடி கேமரா வைத்து அதே குடியிருப்பில் வசித்து வரும் பெண் வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது சிசிடிவி வீடியோ காட்சிகளை பதிவிரக்கம் செய்து அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி, உண்னுடைய மனைவி ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் இது குறித்தான வீடியோ கட்சிகளை அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,
மேலும் படிக்க | பாலியல் பலாத்காரம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம்...
இது குறித்து அப்பெண் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் விசாரிக்கபட்டு சிசிடிவி காட்சிகளை கொண்டு லக்ஷ்மி நாராயாணை போலீசார் பெண் வண்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்,
அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காரில் போலீசார் ஏற்றிய போது லக்ஷ்மி நாராயணன் பேசியதாவது, தன் மீது சேலையூர் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தனக்கு உணவு அளிக்காமல் கொடுமைபடுத்தியதாகவும்,
மேலும் படிக்க | சாக்லேட் வாங்கித் தந்து சிறுவனிடம் தவறாக நடந்த முதியவர் கைது...
தான் ஐந்து வருடமாக தனியாக வசித்து வரும் நிலையில் ஆசை இருந்திருந்தால் ஆன்லைன் மூலமாக பார்க்க முடியும் நான் ஏன் சிசிடிவி கேம்ராவை வைத்து பார்க்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் பேசியவர் சிறைக்கு கொண்டு செல்லபட்டார். இதனால் சேலையூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும் படிக்க | மாமா, மாமா மகன் சேர்ந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்...