16 வயதில் ஒரு பெண்..19 வயதில் ஒரு பெண்..இருவரையும் கடத்தி சென்ற டியூஷன் வாத்தி!! பின்னணி என்ன?

இரண்டு பெண்களுடன் ஆந்திராவுக்கு எஸ்ஸான டியூசன் ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

16 வயதில் ஒரு பெண்..19 வயதில் ஒரு பெண்..இருவரையும் கடத்தி சென்ற டியூஷன் வாத்தி!! பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணிமாறன் மீது ஒழுங்கீனச் செயல்களை செய்ததாக எழுந்த புகாரின் பேரில்  கடந்த 2019 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து மணிமாறன் ஆத்தூரில் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார். ஆனால் அங்கும் தன் கைவரிசையை காட்டிய மணிமாறன் கொஞ்சம் வித்தியாசமாக பொதுமக்களின் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டால் அவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

அதன்பின் மணிமாறன் சரவணம்பட்டி என்ற பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். பிறகு அப்பகுதியிலே உள்ள ஒரு பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதே சமயம் இவரது பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு கணிதப்பாடம் டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்திகொண்ட மணிமாறன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திய சென்றுள்ளார்.

பின் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியோடு மணிமாறனை தேடியும் வந்தனர். விசாரணையில் மணிமாறனுக்கு ஏற்கெனவே இரு முறை திருமணமாகியதும், இருப்பினும் 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைக்கூறி பொள்ளாச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. 

அதுமட்டுமில்லாமல் 16 வயது சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு சென்ற மணிமாறன், புதுமண தம்பதி என கூறி அங்கு ஒரு வீட்டில் வாடகைக்கு  தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. அங்கேயும் தன் கைவரிசையை காட்டிய இவர், அந்த வீட்டு உரிமையாளர் மகளிடம் (19 வயது) ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டதும், இதுகுறித்து அந்த வீட்டு உரிமையாளர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் புகார் அளித்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் 16 வயது சிறுமியையும் 19 வயது இளம்பெண்ணையும் மணிமாறன் வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை போலீஸாரும் கன்னியாகுமரி போலீஸாரும் மணிமாறனை தேடி வருகிறார்கள். இதற்கிடையில் தன் தோழிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண், ஆசிரியர் தன்னை பிடித்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பெற்றோருக்கும், காவல் துறைக்கும் அந்த பெண்  தகவல் அளித்ததை அடுத்து, ஆந்திர மாநிலத்தில் அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தை கண்டறிந்த தனிப்படை போலீஸார் விரைந்து சென்று இன்று அதிகாலை மணிமாறனை கைது செய்து உடனிருந்த சிறுமியையும் இளம் பெண்மையும் பத்திரமாக மீட்டனர். 

மேலும் இரண்டு பெண்களை கடத்தி சென்ற மணிமாறனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.