குடிபோதையில் தகராறு: டியூப்லைட்டால் ஒருவர் குத்திக் கொலை!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் டியூப்லைட்டால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிபோதையில் தகராறு:  டியூப்லைட்டால் ஒருவர் குத்திக் கொலை!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் டியூப்லைட்டால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் வயது 54. இவர் படகில் பயன்படுத்தக்கூடிய நைலான் கயிறு செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு வழியாக  சென்று கொண்டிருக்கும் பொழுது வின்சன் (48) என்பவருக்கும் பீட்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் குடிபோதையில் இருந்ததால் வின்சன் அருகிலுள்ள டியூப்லைட்டை எடுத்து பீட்டரை குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருந்தனர்.

தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பீட்டர் உடலை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் பீட்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வின்சன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வருகிறது.