வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்...  சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்...

நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு  கடத்தி வந்த போதை மாத்திரைகள், கஞ்சா  பறிமுதல்.

வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள்...  சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்...

சென்னை  விமான நிலைய சரக்கு பிரிவிற்கு வெளிநாடுகளில்  இருந்து வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனா்.

அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் குண்டபாலம் என்ற கிராமத்திற்கு 2 பார்சல்கள் வந்திருந்தன. அந்த பார்சல்களில் வாழ்த்து அட்டை, ரெயில் மாதிரி பாகங்கள் கொண்டதாக இருந்தது. இந்த பார்சல்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது 5 கிராம் எடை கொண்ட 10 பச்சை நிற போதைகள் மாத்திரைகள், 1 கிராம் ஆம்பெட்மைன், 7 கிராம் மெத் படிகம் இருந்தது. மற்றொரு பார்சலில் 118 கிராம் எடை கொண்ட 261 பிரவுன் நிற போதை மாத்திரைகள் இருந்தன.

அதுப்போல் அமெரிக்காவில் இருந்து ஆந்திராவிற்கு வந்த பரிசு பார்சலில் 132 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது. அதுப்போல் ஸ்பெயின் நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு வந்த பார்சலில் 10 கிராம் உயர் ரக கஞ்சா இருந்தது. 4 பார்சல்களில் இருந்து வந்த 131 கிராம் போதை மாத்திரைகள், பவுடர், 142 கிராம் எடைக் கொண்ட கஞ்சா ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆந்திர முகவரியில் விசாரித்த போது போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டு வந்தது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஒரே நாளில்  கடத்த முயன்ற போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.