கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை!! கன்னியாகுமரியில் நேர்ந்த சோகம்

கல்வி கட்டணம் செலுத்த தாமதம் காட்டி வந்த பெற்றோர்...

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை!! கன்னியாகுமரியில்  நேர்ந்த சோகம்

குழித்துறை அருகே கல்விக்கட்டணம் கட்டமுடியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகள் பிரின்சி.  

மார்த்தாண்டம் பகுதியில் செயல்படும் தனியார் டிப்பிளமோ கல்லூரியில் பயின்று வந்த இவர், கல்வி கட்டணம் கட்டுமாறு தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். வறுமை காரணமாக, அல்லாடி வந்த பெற்றோர், கட்டணம் செலுத்த தாமதம் காட்டி வந்ததாக தெரிகிறது.

இதனிடையே கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளும் வந்த நிலையில், மனமுடைந்த மாணவி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.