இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!!

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு.. 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!!

விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  மேலரதவீதியை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேர் மதுரை மத்திய சிறையிலும், பள்ளி மாணவர் 4 பேர் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். அவர்களிடம்  சிபிசிஐடி  போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு குறித்தான குற்றப்பத்திரிகை கடந்த 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  தவிர்க்க முடியாத காரணங்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்  இன்று 680 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்துர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அர்ச்சனா தாக்கல் செய்தார்.

மேலும் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு எதிராக இளஞ்சிறார் நீதி குழுமத்திலும் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.