பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கொலை செய்ய திட்டம் தீட்டிய காங்கிரஸ் பிரமுகர்...   கூலிப்படையினரிடம் பேரம் பேசும் வீடியோவால் பரபரப்பு...

கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கொலை செய்ய, கூலிப்படையினரிடம் காங்கிரஸ் பிரமுகர் பேரம் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கொலை செய்ய திட்டம் தீட்டிய காங்கிரஸ் பிரமுகர்...   கூலிப்படையினரிடம் பேரம் பேசும் வீடியோவால் பரபரப்பு...

பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத், பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவராக உள்ளார். இந்த நிலையில் அவரை கொலை செய்ய, கூலிப்படையினரிடம் காங்கிரஸ் பிரமுகர் கோபால கிருஷ்ணா பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூலிப்படையை ஏவி கொலை செய்வது குறித்து, பேரம் பேசும் காட்சிகள் மற்றும் உரையாடல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 

இந்த வீடியோ வைரலான நிலையில், குல்லா தேவராஜை கைது செய்து, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோவில் இருப்பது கோபாலகிருஷ்ணன் தான் என அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, கோபாலகிருஷ்ணனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரசை சேர்ந்த கோபாலகிருஷ்ணா, எலகங்கா தொகுதியில் எஸ்.ஆர்.விஸ்வநாத்தை எதிர்த்து 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.