ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் தற்கொலை...முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த உண்மை!

ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் தற்கொலை...முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த உண்மை!

புதுச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடன் தொல்லையால் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் தற்கொலை:

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தியாகராஜன் - பச்சைவாழி தம்பதி. இவர்களுக்கு லட்சுமி, ஆகாஷ் என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் எப்போதும் பரப்பாக இருக்கும் வீட்டில் இன்று காலை முதல் தியாகராஜன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது அனைவரும் வீட்டிற்குள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான உண்மை:

இந்நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுனர் தியாகராஜன் குழந்தைகளை தலையணையால் கொலை செய்து விட்டு,  அவரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.