பொன்னேரியில் கொலை முயற்சி! தலைமறைவான நால்வருக்கு வலைவீச்சு:

தண்டையார்பேட்டையில் பிரபல ரவுடியை விரட்டி விரட்டி வெட்டிய கும்பலை ஒரு மணி நேரத்திலேயே கைது போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரியில் கொலை முயற்சி! தலைமறைவான நால்வருக்கு வலைவீச்சு:

வடசென்னை தண்டையார்பேட்டையில் ரவுடி ஒருவர் முன் விரோதம் காரணமாக கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். குற்றம் செய்தவர்களில் மூவரை, ஒரு மணி நேரத்திலேயே போலீசார் பிடித்தாலும், ஈடுபட்ட மேலும் நால்வர் தலைமறைவானதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மர்ம கும்பல்:

தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் பார்த்தி என்கிற பாபா பார்த்திபன். தனது குடியிருப்பிற்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த இவரை தீடீரென அங்கு வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக ஓட ஓட வெட்டிவிட்டு தப்பியோடியது.

மேலும் படிக்க: போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சைக்கிள் பேரணி..!

போலீசுக்கு தகவல்:

இச்சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறைக்கு தகவலளித்ததை அடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட பார்த்திபனை ஸ்டான்லீ அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முன்விரோதம்:

தலையில் சுமார் எட்டு வெட்டுக்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக அப்பகுதி துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து"விசாரணை நடத்தியதில் இந்த கொலை முயற்சி சம்பவமானது முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த இணை ஆணையாளர்:

குற்றவாளிகள் தலைமறைவு:

இதனையடுத்து குற்றசம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர், சதீஷ்குமார்( ) காவா சதிஷ், யுவராஜ்(18) ஆகிய மூவரையும் போலிசார், சுமார் ஒஇரு மணி நேரத்திலேயே தேடி கண்டுபிடித்து, கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவான நாகராஜ், பாலாஜி, அஜித், ராகுல் ஆகிய நால்வரையும் போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தொடர் கொலைகள்:

 இதே பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடமாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நடந்ததை அடுத்து இந்த ரவுடி கொலை முயற்சியால், அப்பகுதி மக்கள் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளனர்.