குடிபோதையில் தகராறு... கத்திக்குத்து வாங்கிய இளைஞர்..!!

குடிபோதையில் தகராறு... கத்திக்குத்து வாங்கிய இளைஞர்..!!

சென்னை புளியந்தோப்பு பார்த்தசாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் அஜித் 24 இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சாஸ்திரி நகர் 10வது தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.  அப்போது ஏற்கனவே அவருக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆகாஷ் என்கின்ற விக்னேஷ், சதீஷ், சஞ்சய்  உள்ளிட்ட சிலர் அஜித்தை அழைத்து வீண் தகராறு செய்துள்ளனர். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.  அப்பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக அஜித்குமாரை வெட்டியுள்ளனர்.  இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், சதீஷ், சஞ்சய் என்கின்ற நரம்பு சஞ்சய், ஆகாஷ் என்கின்ற விக்னேஷ், சூர்யா, சஞ்சய் என்கின்ற கடா சஞ்சய் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர்.  

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் சம்பவம் நடந்தபோது அஜித் அவ்வழியாக சென்றபோது ஆறு பேரும் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாகவும் அப்போது அஜித் என் முன்னாடி அமர்ந்து  மது அருந்துகிறீர்களா? என கேட்டு அவர்களை தாக்கியதாகவும் அப்பொழுது பதிலுக்கு அவர்கள் கத்தி யை எடுத்து வெட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.  இதனை அடுத்து ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:   விலங்குகளுக்காக 12 ஆயிரம் கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ளும் குஜராத் இளைஞர்...!!