மகள்களுக்கு மட்டும் செலவு செய்ததால் ஆத்திரம்.. தந்தையை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த கொடூர மகன்!!

சொத்து தகராறில் தந்தையை கொன்று, உடலை பிலாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மகள்களுக்கு மட்டும் செலவு செய்ததால் ஆத்திரம்.. தந்தையை கொன்று பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து புதைத்த கொடூர மகன்!!

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த குமரேசனுக்கு, குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாளா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.

இவர் வளசரவாக்கத்தில் தனக்கு செந்தமாக உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தனது ஓய்வூதியம் மற்றும் வாடகை பணத்தை  முதியவர் தனது மகள்களுக்கே செலவு செய்து வந்துதால், மகன் குணசேகரன் தந்தை மீது கோபத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்  கடந்த 15 ஆம் தேதி முதியவர் வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி, குணசேகரன் அவரை கொலை செய்து,  டிரம்மில் அடைத்தார். தொடர்ந்து, ரானிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு சென்ற அவர் அங்கு உள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதாக கூறி நிலத்தை பார்வையிட்டார்.

அதன் பிறகு யாரோ தனக்கு சூனியம் வைத்திருப்பதாகவும், அதனை மந்திரவாதி உதவியோடு டிரம்மில் அடைந்துள்ளதாகவும், புதிதாக வாங்கும் இடத்தில் அதை புதைக்க வேண்டும் என நில உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன், அப்பகுதியை சேர்ந்த பெருமாளின் உதவியோடு அந்த டிரம்மை புதைத்துள்ளார்.

இதனிடையே, தந்தை வீட்டில் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது மகள் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள குணசேகரனை தேடி வருகின்றனர்.