குழந்தைகள் முதல் பெண்கள் வரை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை! ஆந்திர போலீஸின் அட்டூழியம்! நீதி கிடைக்குமா?

குழந்தைகள் முதல் பெண்கள் வரை விசாரணை என்ற பெயரில் சித்ரவதை! ஆந்திர போலீஸின் அட்டூழியம்! நீதி கிடைக்குமா?

மத்தூர் அருகே புளியண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களை விசாரணை என்ற பெயரில்   அழைத்துச் சென்ற ஆந்திரா போலீசார் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியண்டபட்டி கிராமத்தில் பழங்குடி  இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஐயப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து ஆந்திர மாநில போலீசார் ஐய்யப்பன், அவரது தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர் அருணா, 7 வயது குழந்தை ஸ்ரீதர் உட்பட நான்கு பேரை கடந்த ஜுன் 11ம் தேதி சித்தூர் போலீசார் விசாரணைக்காக சிவில் உடையில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஐயப்பனின் சகோதரி சத்யா என்பவர் ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார். இதனால் ஆத்திர மாநில போலீசார் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இரவு 15 க்கும் மேற்பட்ட போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி ஹார்ட் டிஸ்கை எடுத்துக் கொண்டு பின்னர் சத்யா ரமேஷ் ரேணுகா அருணா, பூமதி மற்றும் ராகுல் என்ற ஆறு வயது குழந்தை உட்பட ஆறு பேரை அழைத்துச் சென்றனர். இவர்களை ஆந்திரா போலீசார் சாதி குறித்து பேசியதாகும் மேலும் பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி சித்திரவதை செய்ததாகவும், மேலும் இரண்டு பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் (கூறப்படுகிறது) குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது குறித்து தமிழ்நாடு குறவன் இனத்தவர் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மேலும் கடந்த 16ஆம் தேதி இரவு மத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு குறவர் சங்கம் மாநிலத் தலைவர் ரவி தலைமையில் 20க்கும் மேற்பட்ட உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டினர். பின்னர் தமிழக போலீசார் மற்றும் ஆந்திர போலீசார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரை விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக ஐயப்பன் மற்றும் அவரது மனைவி பூமி ஆகிய இரண்டு பேரையும் அங்கே போலீசார் காவலில் வைத்ததாக தெரிகிறது.

மேலும் அங்கு விடுவிக்கப்பட்ட எட்டு பேரில் ஆறு பேருக்கு பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல்.லூசூரி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை குழுவினர் இன்று முன்னதாக போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் ஆய்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செய்தனர். பின்னர் புளியாண்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஐயப்பன் மற்றும் அவரது அக்கா சத்யா வீட்டில் உள்ள எட்டு பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விசாரணை செய்யப்படுவது குறித்து வீடியோ பதிவு எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. புளியண்டபட்டி கிராமத்தில் ஆந்திர போலீசார் திடீரென விசாரணை நடைபெறும் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்.. தகராறுக்கு பின்னணியில் அரசியலா?