வெளிநாட்டிற்கு மோசடி வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட்...! இரண்டு பேர் கைது...!

வெளிநாட்டிற்கு மோசடி வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட்...! இரண்டு பேர் கைது...!

புதுக்கோட்டையை சேர்ந்த சையது இப்ராஹீம் என்பவர் கடந்த ஜூலை மாதம் கம்போடியாவில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு ஏமாற்றப்பட்டு மோசடி நிறுவனத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பி கடந்த 5 ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர், கம்போடியாவில் வேலைக்காக சென்ற ஏராளமான தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அங்கு  மோசடி வேலைகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். அந்த வேலைகளை செய்ய மறுத்தால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களை மீட்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

மேலும் திருச்சி, தில்லைநகரை சேர்ந்த வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை சேர்ந்த ஷானவாஸ், முபாரக் அலி ஆகிய இருவர் தான் கம்போடியாவிற்கு தன்னை வேலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்திருந்தார். அவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். அதனை தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி வைத்திருக்கும் ஷானவாஸ் மற்றும் முபாரக் அலி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.