வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை...!

வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை...!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நாத்தம் ரைஸ்மில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(40). இவருடைய மனைவி மேனகா இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தலி பகுதியில் பேக்கிரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான ரைஸ் மில் வட்டத்தில் உள்ள வீட்டை சுத்தம் செய்ய வந்துள்ளார்.

அப்போது வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார் கேசவன். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 16 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கேசவன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.