திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞர்...! அரிவாளால் தாக்கிய தந்தை...!

திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞர்...! அரிவாளால் தாக்கிய  தந்தை...!

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அருகே உள்ள பூந்தமல்லி நகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது வீட்டில் தமிழ்ச்செல்வன்(27) என்பவர் 7 வருடங்களுக்கும் மேலாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் கனகராஜின் மகள் மீது, தமிழ்செல்வனுக்கு காதல் மலர்ந்துள்ளது. இதனை அறித்து கண்டித்த கனகராஜ், தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வனையும் வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லியுள்ளார். மேலும், தமிழ்ச்செல்வன் திருமணம் முடித்த பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இது குறித்து தெரிந்த பெண்ணின் தந்தை  தமிழ்ச்செல்வனை அழைத்து கண்டித்துள்ளார். அதனையும் மீறி உறவை தொடர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தையின் தூண்டுதலின் பேரில் முத்துக்குமார், செல்வம், சின்னத் தம்பி, முத்து உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் நேற்று  காலை தமிழ்செல்வன் வீட்டுக்குச் சென்று பிரச்சனை செய்து தமிழ் செல்வன், அவரது தந்தை சிங்காரவேலன், தம்பி பாலமுருகன், தாய் ஆகியோரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிந்த கூடல் புதூர் போலீசார் தலைமறைவாக உள்ள கனகராஜ் மற்றும் அவரது உறவினர்களை தேடி வந்தனர். இதில் பெண்ணின் தந்தை கனகராஜ், முத்துக்குமார், செல்வம், சின்னத் தம்பி  ஆகிய 4 பேரை கூடல் புதூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 5 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த இளைஞரின் குடும்பத்தை பெண்ணின் உறவினர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம மதுரையில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க :  மீண்டும் சவால் விடுத்த நாராயணசாமி...ஏற்பாரா தமிழிசை?