கொலை மிரட்டல் விடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்!! மாணவி தாயாகியதால் வாலிபர் அதிரடி கைது

கொலை மிரட்டல் விடுத்து 10-ம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து தாயாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கொலை மிரட்டல் விடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்!! மாணவி தாயாகியதால்  வாலிபர் அதிரடி கைது

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் அந்த மாணவி தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல் சம்பவத்தன்றும் அந்த மாணவி, தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஒரு பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் அங்கு சென்று, அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து நடந்த சம்பவங்களை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி அந்த மாணவிக்கு நவீன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் இதையே காரணமாக வைத்துக்கொண்டு அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ஒருநாள் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, நவீன் என்ற இளைஞன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தது பற்றி மாணவி கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறாள். 

இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைதொடர்ந்து, மாணவியின் தாய் இது குறித்து அளித்த புகாரின் பேரில், போலீசார் நவீன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.