நண்பருடன் பண்ணைக்கு சென்ற சிறுமி..வலுக்கட்டாயமாக மதுவை ஊத்தி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்!!

தனது நண்பருடன் பண்ணைக்கு சென்ற சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பருடன் பண்ணைக்கு சென்ற சிறுமி..வலுக்கட்டாயமாக மதுவை ஊத்தி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல்!!
Published on
Updated on
1 min read

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மலையடிவாரத்தில் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணைக்கு தனது நண்பருடன் சென்ற சிறுமிக்கு 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய கட்ச் மாவட்ட எஸ்.பி. சவுரப் சிங் தலைமையிலான போலீசார், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, பண்ணை பகுதிக்கு தனது நண்பருடன் அந்த சிறுமி சென்றுள்ளார்.  அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் இவர்கள் இருவரும் பண்ணைக்கு வருவதை கவனித்திருந்து பின் தொடர்ந்துள்ளனர்.  அப்படியே இறுதி வரை பின் தொடர்ந்து சென்ற கும்பல், சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்துள்ளனர்.

இதன்பின், மதுபானம் குடித்ததில் மயக்கமடைந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.  அந்த சமயத்தில் அவர்களில் ஒருவரை சிறுமிக்கு நினைவு இருந்துள்ளது. அந்த துப்பை வைத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபரை போலீசார் பிடித்ததும் அவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மையை ஒப்பு கொண்டுள்ளனர்.  மேலும் இந்த வழக்கில் ஈடுபட்ட மற்ற 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது பற்றியும், சிறுமியின் நண்பருக்கும் இதில் சம்மந்தம் உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த பின்னரே அது தெரிய வரும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com