காதலியை கொன்ற காதலனுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல்...

டெல்லியில் காதலியைக் கொன்று அதே நாளில் மற்றொரு திருமணம் செய்து கொண்டவருக்கு 5 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

காதலியை கொன்ற காதலனுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல்...

சாகில் கெலாட் - நிக்கி யாதவ் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், காதலிக்குத் தெரியாமல் வீட்டில் பார்த்த பெண்ணை சாகில் மணம் செய்ய முயன்றதாகத் தெரிகிறது.

இதனை தட்டிக்கேட்ட நிக்கியை, சார்ஜர் ஒயரால் கழுத்தை நெறித்துக் கொன்ற சாகில், உடலை காரில் எடுத்துச் சென்று மிட்ரோன் கிராமத்தில் ஃபிரிட்ஜில் வைத்துச் சென்றார்.

தொடர்ந்து அதே நாளில் வேறு திருமணம் செய்த சாகிலை கைது செய்த போலீசார், சிசிடிவி கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | புதிதாக திருமணமான இளம் ஜோடி, கைக்கோர்த்து சடலமாக மீட்பு...