மர்ம மரணத்திற்கு பின்னணியில் மூன்று காதலா? அம்பத்தூர் கொலைக்கு காரணம் இதுதானா?

அம்பத்தூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பவித்ராவின் கொலை, பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்ததோடு, அவரது மரணத்திற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

மர்ம மரணத்திற்கு பின்னணியில் மூன்று காதலா? அம்பத்தூர் கொலைக்கு காரணம் இதுதானா?

சென்னை | அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் வசித்து வந்தவர் பவித்ரா. 28 வயதான இவர் 2 வருடங்களுக்கு முன்பு ரெஜிஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு, புழல் கதிர்வேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது பக்கத்து வீட்டு பையனான ராஜா, தனது காதலை வெளிப்படுத்திய நிலையில், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. மேலும், ஏற்கனவே மதுபழக்கம் இருக்கும் 35 வயதான ராஜா, தனது பழக்கத்தை பவித்ராவிற்கும் கொடுத்து இருவரும் அவ்வப்போது மது அருந்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கள்ளக்காதல் ஜோடிகளின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு... தற்கொலையா ??கொலையா??

பவித்ராவிடம் நெருக்கமாக பழகிய ராஜா, தனது காதலி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த, அதாவது திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்க, பவித்ராவும் ஒப்புக்கொண்டார். ஆனால், பவித்ராவின் கை கேட்டு பெரியவர்களின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்த காதல் ஜோடிக்கு ஏமாற்றமே வந்தது. இருவீட்டாரும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழுப்புரத்திற்கு காதல் ஜோடி சென்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் இருவருமே வேலை பார்த்த சில நாட்களிலேயே வேலை பார்க்க பிடிக்காததால், வேலையை விட்டு, விழுப்புரத்தை விட்டு, மீண்டும் அம்பத்தூருக்கே சென்று ஒரு சிறிய வீட்டில் தங்கினர். வருமானத்தை எப்படி அதிகரிப்பது என பணம் நோக்கி சென்ற ராஜா, கொசு வலை பின்னி வந்தார்.

மேலும் படிக்க | ஒரு வாய் பீருக்காக அடித்து கொலை செய்யப்பட்ட முதியவர்!!! பதுங்கிய குற்றவாளி கைது...

ஆனால், பவித்ராவுக்கு மேலும் ஒரு காதல் முளைத்திருக்கிறது. ராஜ்குமார் என்பவருடன் திருட்டுத் தனமாக சுற்றி வந்த பவித்ரா, ராஜாவுடன் இருந்த சிறிய வீட்டிலேயே ரு நாள் ராஜ்குமாருடன் உறவு கொண்டுள்ளார். இந்த கதை, இரண்டாம் கணவரான ராஜாவுக்கு தெரியவர, தன்னால் ஏதும் செய்ய முடியாத அவல நிலையில், அழுது புலம்பியிருக்கிறார். தகவலறிந்த முதல் கணவர் மற்றும், ராஜா குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், ராஜாவுக்கும் பவித்ராவுக்கும் இடையேயான மோதல் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு வழக்கம்போல கணவன் மனைவி இருவரும் மது அருந்தியபோது முன்னாள் காதலன் குறித்தும் மூன்றாம் காதலன் குறித்தும் பேச்சு எழுந்தது. ராஜ்குமாரிடம் பேச்சைக்குறைக்க வேண்டும் என ராஜா எவ்வளவோ சொல்லியும் சிறிதும் ஏற்றுக் கொள்ளவில்லை பவித்ரா.

மேலும் படிக்க | கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து...மூன்று பேர் உயிரிழப்பு!!!

இதனால் கடும் கோபமடைந்த ராஜா, பவித்ராவின் தாலிச்செயினை இழுத்துப் பிடித்து கழுத்தை சுற்றி நெரித்தான். கழுத்து நரம்பு இறுகியதில் செய்வதறியாது பரிதவித்த பவித்ரா சில நிமிடங்களிலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராஜாவை விழுப்புரத்தில் வைத்து தூக்கி வந்தனர். ரெஜிஷ், ராஜா, ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் காதலித்த பவித்ரா உயிரிழந்த சம்பவம், அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொடூர கொலை...