லாரி மீது கார் மோதி 3 பேர் பலி...

ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி மீது கார் மோதி 3 பேர் பலி...

சென்னையை சேர்ந்த மூன்று பேர் கார் ஒன்றில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் இன்று காலை ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள தருமாபுரம் சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஆயுள் டேங்கர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் கார் முழுவதுமாக நசுங்கி அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற நகரி  போலீசார் மரணமடைந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

விபத்தில் மரணம் அடைந்த மூன்று பேர் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரிய வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத்