விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது...

காரமடையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது...

சேலம் | வரடேரிகாடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி சாந்தி(35). ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கோஷடி தோவுடா மகன் கோஷடி மரிநியா(28) ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சதீஸ்காகாரா ஆகிய மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்து காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு வாகனத்தில் வைத்து நின்று கொண்டிருந்துள்ளனர்.

மேலும் படிக்க | அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டம்.....நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள்.....

அப்போது அந்த வழியாக வந்த காரமடை காவல் ஆய்வாளர் குமார்,உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செயதுள்ளனர்.அப்போது வாகனத்தில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர் நீதிபதி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.

மேலும் படிக்க | துணிக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!