ஸ்டாலினின் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன்.! தோப்பு வெங்கடாசலத்தை வைத்து திமுக பலே திட்டம்..!  

ஸ்டாலினின் கண் அசைவுக்காக காத்திருக்கிறேன்.! தோப்பு வெங்கடாசலத்தை வைத்து திமுக பலே திட்டம்..!  

ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு கே வெங்கடாசலம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பெருந்துறையில் போட்டியிட்டு வென்றார். இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா கொடுத்தார்.  2016 ஆம் ஆண்டும் அதே பெருந்துறை பகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார் தோப்பு வெங்கடாசலம். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

 ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓரங்கப்பட்டிருந்த தோப்பு வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் தனது ஆதரவாளர்களுடன் அவரை சந்தித்து பேசினார்.
அப்போதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விரக்தியடைந்த அவர் பெருந்துறையில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக தலைமையும் அவரை கட்சியை விட்டு நீக்கியது. இதனால்  அதிமுக மீது கடும் கோபமடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 

அதன்பின் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையே முக்கிய அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டு வருவது தான். தான் திமுகவில் இணைந்த போதே, திமுக தலைமையின் கண் அசைவிற்காக காத்து இருக்கிறேன். தலைவர் அனுமதியும், ஒரு மாதம் அவகாசமும் கொடுத்தால் போதும். அதிமுகவில் இருந்து மொத்தமாக பலரை திமுக பக்கம் கொண்டு வருவேன் என்று ஆவேசமாக கூறினார். 

அதன்படி தோப்பு வெங்கடாச்சலம் மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர், நிர்வாகிகள் என்று பலரை ஒரே நேரத்தில் திமுகவுக்கு இழுக்க திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் பலர் திமுகவுக்கு தாவலாம் என்று சொல்லப்படுகிறது.