இந்து தர்மத்தின் ‘போப்’ ஆண்டவரைப் பாதுகாக்க வேண்டும்- கைலாசா பிரதிநிதி...

ஐக்கிய நாடுகளின் சந்திப்பில், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவின் பிரதிநிதி கலந்து கொண்டு பேசிய சில கருத்துகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

இந்து தர்மத்தின் ‘போப்’ ஆண்டவரைப் பாதுகாக்க வேண்டும்- கைலாசா பிரதிநிதி...

நித்தியானந்தா என்றாலே எப்போதும் பல பிரச்சனைகள் தான். அதிலும், அவர் மீதான வழக்குகள் புகார்கள் தாண்டி அவர் தற்போது பல நாடுகளில் முக்கிய கிரிமிணலாக கருதப்பட்டு தேடப்பட்டும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது உலக நாடுகள் இணைந்து வைக்கும் கூட்டத்தில், கைலாசாவில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதி, நித்தியானந்தா தான் இந்து மதத்தின் மிகப்பெரிய மத குரு எனவும், அவரைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், பல வகையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் படிக்க | ஏன் அக்னிபாத்... வெளியில் வரும்போது 11 லட்சமா... மத்திய அரசு கூறுவதென்ன?!!

2019ம் ஆண்டு, குஜராத்தில் இருந்து பாலியல் வழக்கில் இருந்து தப்பி ஓடிய தன்னைத் தானே மதகுருவாக பிரகடனம் செய்து கொண்டார் நித்தி. ஒளிந்து, பதுங்கி இருக்கும் நித்தி, தன்னை ஒரு மதகுருவாக காட்டிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தற்போது தன்னையே ஒரு கடவுளாகவே ஆகிக் கொண்டார்.

மேலும், அடையாளம் அற்ற ஒரு தீவில் இருக்கும் இவர், தானே ஒரு ‘கைலாசா’ என்ற நாட்டைக் கண்டுபிடித்ததாகவும், அதற்குத் தானே போப் ஆண்டவர் போல தலைவராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது சிஷ்யர்களுக்கு குடியுரிமையும், பாஸ்போர்ட்டுகளும் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நேரத்தை மிச்சப்படுத்தி பிரியாணி வாங்குவது எப்படி?

கைலாசா என குறிப்பிடாமல், யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா எனக் குறிப்பிடப்படும் நிலையில், தனது நாட்டின் பிரஜை வைத்து, UN அசெம்ப்ளியில் கலந்து கொண்டுள்ளார் நித்தி. அந்த சந்திப்பில், இந்து மதத்தின் மிகப்பெரும் மதகுருவாக நித்தியைக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

பிப்ரவரி 22 அன்று, மா விஜயப்ரியா நித்யானந்தா என்ற பெண்மணி, 19வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் (CESR) கூட்டத்தில், 'அமெரிக்கா கைலாச'வை 'பிரதிநிதித்துவப்படுத்தினார்'. ஐக்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், விஜயப்ரியா 'கைலாசத்தின் நிரந்தர தூதர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 10 வயது மகனை வீட்டிலேயே 3 வருடங்கள் பூட்டி வைத்த தாய்…

நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) பற்றி விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய விஜயப்ரியா, SDG களுக்கும் இந்து மதத்திற்கும் இடையே ஒரு தெளிவற்ற தொடர்பை ஏற்படுத்தினார், பின்னர் தனது 'தேசத்தை' நிறுவிய நித்தியானந்தா, அவர் பிறந்த நாடான இந்தியாவால் 'துன்புறுத்தப்படுகிறார்' என்று கூறினார்.

இந்து மதத்தின் வாழும் உச்சத் துறவியாக நித்தியைக் குறிப்பிட்ட விஜயப்ரியா, தங்கள் கடவுளான நித்தியானந்த பரமசிவத்தையும் கைலாசா நாட்டையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், நித்யானந்தா மற்றும் கைலாசத்தில் உள்ள இரண்டு மில்லியன் இந்து புலம்பெயர்ந்த மக்களை துன்புறுத்துவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் "ஐ.நா. மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள்" நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | மட்டன் பிரியாணியில் பூனைக்கறியா...? பிரியாணிப் பிரியர்களே உஷார்...!

தொடர்ந்து பேசிய அவர், “இந்து மதத்தின் கொள்கைகள், தீர்வுகள் மற்றும் கொள்கைகளை" சர்வதேச தளங்களில் கேட்க அனுமதிக்குமாறு மாநாட்டில் உள்ள தலைவர்களை அவர் வலியுறுத்தினார். கைலாசா 150 நாடுகளில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியதாக அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தொடர்ந்து எப்போது சர்ச்சையிலேயே சிக்கி இருக்கும் நித்தி எப்போது தான் திருந்த போகிறாரோ என பலரும் தங்களது கருத்துகளை சோசியல் மீடியாக்கள் இல் பதிவிட்டு ம், நித்தியை கேலி செய்தும் வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

The United States of America signs bilateral agreement with United States  of KAILASA


சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். 


திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பகீர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ககன் தீப் சிங் பேடி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி தனக்கென்று ஒதுக்கப்படும் துறைகளில் தனக்கான பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். அதுமட்டுமல்லாமல், சுனாமி, மழை, வெள்ளம் என அனைத்து பேரிடர்களிலும் களப்பணியாற்றியதில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனால், இவர் மீது இதுவரை எந்தவித புகாரும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவரின் கீழ் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியே புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங், திமுக ஆட்சியில் முதலில் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். பிறகு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது, அவருக்கு கீழ் துணை ஆணையராக மணீஸ் நரவனே நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வரும் மணீஸ் நரவனே, சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் மீது புகார் தெரிவித்துள்ளார். இது புகார் தொடர்பாக, தலைமைச் செயலாருக்கு 2 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அனுப்பியுள்ளார். அதில், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன் தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க : 2024 நாடாளுமன்றத் தேர்தல்...ஜூலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை!

மேலும், சென்னை மாநகராட்சி சார்பாக இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜெய்ன் கோயிலுக்கு செல்கிறாய் என்று கேட்டு காயப்படுத்தியதாகவும், அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தி, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்குனதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியின் கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்ததாகவும் விமர்சித்துள்ளார்.

 

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும், மூத்த அதிகாரியாகவும் இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. எனவே, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று மணீஸ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த புகார் தொடர்பான அறிக்கையையும் மணீஸ் நரவனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், மணீஸ் நரவனே தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார். இதற்கு மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

3 மாத குழந்தைக்கு அலட்சியமாக தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன், பிரியா தம்பதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
 
குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், 100-வது நாள் ஊசி போடுவதற்கு செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு இடது கால் தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட மறுநாள், ஊசி போடப்பட்ட இடது தொடையில் கட்டி போன்று பெரிதாக சிவந்த நிறத்தில் காணப்பட்டது. ஊசி போடப்பட்ட இடத்தை தேய்க்க வேண்டாம் என செவிலியர் கூறியிருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுத்த போதும், கட்டி பெரிதாகிக்கொண்டே போயுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

 

இனிமேல் குழந்தை விஷயத்தில் தாமதிக்ககூடாது என நினைத்த தாயும், பாட்டியும், தனியார் மருத்துவமனையை நாடியுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஊசி போடும்போது குழந்தையின் தொடை பகுதியில் உள்ள சதையை இரு விரல்களில் சேர்த்து பிடித்து ஊசி போட்டிருக்க வேண்டும், ஆனால், செவிலியர் அலட்சியமாக ஊசி போட்டதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

மேலும் குழந்தையின் தொடை பகுதியில் பாதியளவு கட்டி பரவியுள்ளதாகவும், இன்னும் தாமதித்தால் எலும்பு பகுதி வரை சென்று எலும்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதறிய குழந்தையின் பெற்றோர், உடனடியாக சிகிச்சையளிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்கு காலில் ஏற்பட்ட கட்டியை அகற்றினர்.

பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களை போல் இனிமேல் யாரும் பாதிக்கக்கூடாது எனவும் குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க:காவல்துறை உங்கள் நண்பன்; நண்பன் கடையில் டீ குடித்தால் காசு கொடுக்க வேண்டுமா?

மருதமலை திரைப்படத்தில்  வடிவேலு, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில், கடைகளில் மாமூல் வசூலித்துக் கொண்டிருக்கும் பொழுது, பிச்சைக்காரர் ஒருவர் அதே கடைக்கு பிச்சைக் கேட்டு வருவார். அப்போது, இரண்டு பேருக்கும் பணம் கொடுக்கும் வகையில், கடைக்காரர் தனித்தனியே தூக்கி வீசுவார். பிச்சைக்காரர் அதை கேட்ச் பிடித்துவிடுவார், ஆனால் வடிவேலு தவற விட்டுவிடுவார். அதற்கு கடைக்காரர், "என்ன ஏட்டையா, ஒரு பிச்சைக்காரன் கரெக்ட்டா புடிக்கிறான், நீங்க பிடிக்கமாற்றிங்க" என்று நக்கலாக கூறுவார். அதாவது, காவலர் வெளிப்படையாக மாமூல் வசூலிப்பதும், இதில் மக்களுக்கு ஆவர் மேல் மரியாதை குறைபாடு உள்ளது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற நிலைமை தற்போது தமிழ் நாட்டில் நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. காவலர்கள், பணியின் போது, அவ்வப்போது இது போன்று, உணவகங்களில் சென்று உணவருந்திவிட்டு பணம் கொடுக்காமல் வருவது தொடர் கதையாகி வருகிறது. இதே போன்ற சம்பவம், காஞ்சிபுரம், படைப்பை பகுதியில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வளராக பணியாற்றி வருகிறவர் விஜயலட்சுமி. இவர், காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு காவலர்கள் சேர்ந்து, இரவு ரோந்து செல்வது வழக்கம். வழக்கம் போல, இரண்டு நாட்கள் முன்பு, காஞ்சிபுரம் படைப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், காவலர்கள் நான்கு பெரும், தேநீர் அருந்திவிட்டு, கடை விற்பனையாளரிடம் பணம் தர மறுத்ததாக புகார் எழுந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட உணவகத்தின்  உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்ச்சியில், விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகின்றது. மேலும், கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, கடையின் உரிமையாளர், மணிமங்கலம் காவல் நிலயத்தில் தகராறில் ஈடுபட்ட காவலர்கள் மீது புகார் அளித்தார்.

புகார் எழுந்ததையடுத்து, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமலராஜ், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார். அதில், விஜயலட்சுமி மற்றும் ஜெயமாலா தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், காவலர் விஜயலட்சுமி மற்றும் மற்ற மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.வழுக்கி விழுந்து கை - கால் உடைந்த' கைதிகள் லிஸ்ட்! - 4 ஆண்டுகளில் எத்தனை  பேர்?

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததால், இச்சம்பவத்தில் உடனடி தீர்வு காணப்பட்டிருந்தாலும், கண்ணுக்கு  தெரியாத இது போன்ற சம்பவங்கள், தொடர்ந்து காலம் காலமாக நடந்து வருவது காவல்துறையினரால் மறுக்க முடியாத  ஒன்றாகும். விசாரணைக்கு காவல்நிலையம் வரும் குற்றவாளிகள் கழிவறையில் வழுக்கி விழுவது, அதற்காக அவர்களுக்கு மாவுக்கட்டு போடுவது, அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்து, சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கினாலும், மடக்கி பிடித்து காவலர்களின் ஆற்றலை காட்டுவது, வழக்குக்காக கைது செய்யப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி அட்ராசிட்டி செய்வது போன்ற காரியங்களில் தமிழ் நாடு காவல்துறை சிறப்பாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.   பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றம்

இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால், காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பனாக விளங்க வாய்ப்புள்ளது.

சென்னை: ஆவினில், 30க்கும்  மேற்பட்ட குழந்தை தொழிலார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30க்கும் மேற்பட்ட சிறார் தொழிலார்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

சிறுவர்கள் ஐஸ் கிரீம் பேக்கிங் பிரிவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சிறார்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதாகவும், அவர்களுக்கு உரிய ஊதியத்தை, சம்பத்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், நேற்று ஆவின் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், " ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்ற வாய்ப்பே இல்லை. அவ்வாறு, அவர்கள் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தை தொழிலாளர்கள் பிரச்னையில் ஒப்பந்ததாரரை காப்பாற்ற ஆவின் அதிகாரிகள் முயற்சிப்பதாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், குழந்தை தொழிலாளர்களை ஆவின் பால் பண்ணையில் பணியமர்த்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்," தி.மு.க ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து வருகின்றது என்றால், ஆவினில் குழந்தை தொழிலார்களை பணியில் அமர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழிப்பது, கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார். 

மேலும்," ஆவின் நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் குழந்தை தொழிலார்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எ ன்றும் தெரிவித்துள்ளார்.   

ஆவினில் பணியாற்றிய குழந்தை தொழிலார்களுக்கு, அவர்களின் இரண்டு மாத நிலுவை சம்பளத்தை வழங்கியும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இதற்கு அடுத்ததாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு, ஆவின் அத்துமீறல்களே சான்றாக உள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக  ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்" என்றும்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் சிறார் தொழிலார்கள் பணியில் அமர்த்தப்படுவது தடுக்கப்படும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதியதாக 32 பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகளில் போதிய அளவு மருத்துவர்களும், பேராசிரியர்களும் இல்லாததால், ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை பல்வேறு கல்லூரி நிர்வாகங்கள் சரிவர பின்பற்றாமல் இருந்துவந்தனர். இதன் காரணமாக தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர் தமிழ்நாட்டில் அரசு ஸ்டான்லி கல்லூரி உள்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளும், நாடு முழுவதும் 140 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்தது. 

இதையும் படிக்க : ஒரே எண்ணை கொண்ட 2 வாகனங்கள்...பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு...அதிகாரிகள் சொல்வது என்ன?

இதனைத்தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையக் குழுவினரின் விதிகளின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்கும்படி மருத்துவக்கல்வி இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதியதாக 32 பேராசிரியர் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில்,  தேசிய மருத்துவ ஆணையக் குழுவினரின் விதிகளின்படி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளிலும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும் பேராசிரியர் இடங்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்கு ஏதுவாக ரூ.6.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் மருத்துவக்கல்வி இயக்கம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, 32 புதிய பேராசிரியர்   பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு நிதி ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுடன் வழங்கப்படுவதாகவும் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.