சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக தாயார் குற்றச்சாட்டு!  

நடிகர் சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக தாயார் குற்றச்சாட்டு!   

நடிகர் சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த புகாரை விசாரித்த அன்றைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிலம்பரசன் மைக்கேல் ராயப்பனுக்கு 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து நடிகர் சிம்பு நிதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சிம்பு தரப்பில் உஷா ராஜேந்தர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பேட்டியளித்த உஷா ராஜேந்தர், சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் அவரது படங்களை தடை செய்ய நினைப்பதாக பேசினார்.

மேலும் சிலம்பரசன், மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக்க்கூடாது என்று உஷா ராஜேந்தர் பேசினார். திட்டமிட்டது போல வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.