காதலர் தினத்தில் விவாகரத்தை சொன்ன பிரபல கவர்ச்சி நடிகை!! யார் தெரியுமா?

காதலர் தினத்தில் விவாகரத்தை சொன்ன பிரபல கவர்ச்சி நடிகை!! யார் தெரியுமா?

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்களின் விவாகரத்து விவகாரம் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் நாகசைதன்யா – சமந்தாவின் விவாகரத்து தான் சோசியல் மீடியாவில் டாப்பில் இருந்தது. அவர்களை தொடர்ந்து சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா உடைய விவாகரத்து பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. 

இந்நிலையில் காதலர் தினமான  இன்று பிரபல ஹிந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இவரின் பதிவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஆம். பாலிவுட்டில் மிக பிரபலமான கவர்ச்சி நடிகையாக திகழ்பவர் தான் ராக்கி சாவந்த்.  இவர் இந்தி மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதுவும் தமிழில் இவர் என் சகியே, முத்திரை உள்ளிட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ராக்கி சாவந்த் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர்.  இவரை குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை அவ்வப்போது சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டே தான் இருக்கும். 

இதனிடையே நடிகை ராக்கி சாவந்த் தொழில் அதிபர் ரிதேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியபோது, எனக்கு திருமணமாகி விட்டது. அதை உறுதி செய்ய தான் இந்த பதிவு போட்டிருக்கிறேன். என் கணவர் பெயர் ரிதேஷ். தொழிலதிபரான அவர், லண்டனில் வசித்து வருவதால், திருமணம் முடிந்ததும் லண்டன் சென்றுவிட்டார். இப்படி ஒரு அற்புதமான கணவர் கிடைத்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தி ‘பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ராக்கி சாவந்த் அதில் கணவர் ரிதேஷையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அதற்கு பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்துள்ளது. இதற்கிடையில்,   ஏற்கனவே திருமணம் ஆன ரிதேஷ் மீது அவரது முதல் மனைவியும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காதலர் தினமான இன்று நடிகை ராக்கி தனது கணவர் ரிதேஷை பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ’‘எங்களை மீறி பல சம்பவங்கள் நடந்து விட்டன. இருவரும் கருத்து வேறுபாடுகளை தீர்த்து கொள்ள முயற்சிகள் செய்தும் எங்களால் முடியவில்லை. இதனால் கணவரை பிரிய முடிவு செய்தேன். காதலர் தினத்தில் இப்படியொரு முடிவு எடுத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் என்னாச்சு? என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிரிந்த காதல் கூட ஒன்று சேரும் இந்த காதலர் தினத்தில் நடிகை ராக்கி தன்னுடைய கணவரை பிரிவதாக பதிவு போட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.