இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள்..!

தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்துகளை வாங்க முயலும் நோயாளிகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

இலங்கை அரச வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு; அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள்..!

90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு

தற்போது, இலங்கையில்  உள்ள பெரும்பாலான அரச வைத்தியசாலைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அலுத்கே, நாட்டில் உள்ள வைத்தியசாலை வலையமைப்பு பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகர எல்லையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகள் போன்ற வைத்தியசாலைகள் கூட மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ சங்க அதிகாரி அலுத்கே பேட்டி

மருந்து தட்டுப்பாடு பற்றி ஊடகங்களுக்கு தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித அலுத்கே, நாட்டில் உள்ள வைத்தியசாலை வலையமைப்பு பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு நகர எல்லையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகள் போன்ற வைத்தியசாலைகள் கூட மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெராசிட்டமோல், பிரிட்டன், சேலைன் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் பற்றாக்குறையாக இருப்பதாக அலுத்கே குறிப்பிட்டுள்ளார். வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் எஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் கொழும்பு பொது வைத்தியசாலையில் கூட பற்றாக்குறையாக உள்ளன.


அதிக விலையில் மருந்துகள், அவதியில் நாட்டு மக்கள்

அறுவை சிகிச்சை செய்யும் போது பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, நோயாளிகள் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும் தற்போது மருந்தங்களிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே நோயாளிகள் வாங்க முடியாத அளவுக்கு மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, மருந்துகளை வாங்க முயலும் நோயாளிகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வகங்களில் பிரச்சினைகள் இருப்பதாகவும் அலுத்கே குறிப்பிட்டார்.

மருந்து தட்டுப்பாடிற்கு சுகாதார அமைச்சு தான் காரணம்

நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில்  பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவக் காரணம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.


மேலும் அறிய: உலகை மீண்டும் அச்சுறுத்தும் எபோலா..!!

ஒளடதங்கள் மற்றும் மருந்து வகைகள் தொடர்பில்  ஈடுபட்டுள்ள சகல  நிறுவனங்களையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து, அதனூடாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து தேவையான தீர்மானங்களை எடுக்குமாறு தமது சங்கம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தபோதிலும், அதனை சுகாதார அமைச்சு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. 

இதன் காரணமாகவே நாட்டில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவக்காரணம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.