மக்களவை தேர்தலில் தில்லாலங்கடி: போலி சான்றிதழ் கொடுத்த எம்.பி நவ்னீத் கவுர் ராணா பதவி பறிப்பு?

மக்களவைத் தேர்தலில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

மக்களவை தேர்தலில் தில்லாலங்கடி: போலி சான்றிதழ் கொடுத்த எம்.பி நவ்னீத் கவுர் ராணா பதவி பறிப்பு?

மக்களவைத் தேர்தலில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

பிரபல தெலுங்கு நடிகை நவ்னீத் கவுர் ராணா, தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அமராவதி லோக்சபா தனித் தொகுதியில் சுயேச்சை எம்.பி.,யாக போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததையடுத்து வெற்றி பெற்று மக்களவை எம்.பி. ஆனார்.

இந்நிலையில், நவ்னீத் கவுர் ராணாவிடம் தோல்வியுற்ற சிவசேனா கட்சி வேட்பாளர் ஆனந்த ராவ் , மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், நவ்னீத் கவுர் ராணா தன்னை பட்டியலினத்தவர் என போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும், அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நவ்னீத் கவுர் ராணாவின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என நிரூபணமானது. இதையடுத்து அவரது ஜாதி சான்றிதழை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கவுர் ராணாவின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதனால் அவரது எம்.பி பதவிக்கு ஆபத்து வரும் என்றும் கூறப்படுகிறது.