ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.