மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை....முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை!!!

மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை....முலாயம் சிங் யாதவ் கடந்து வந்த பாதை!!!
Published on
Updated on
1 min read

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். மல்யுத்த வீரராக இருந்த ஒருவர் அரசியல் தலைவராக மாறியது குறித்து விவரிக்கிறது இந்த  செய்தி தொகுப்பு.. 

ஆரம்பகால பணிகள்:

1939-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் எட்வா மாவட்டத்தில் பிறந்த முலாயம் சிங், அரசியல் உலகில் கால் பதிப்பதற்கு முன்பாக மல்யுத்த வீரராக இருந்தவராவார். பள்ளி ஆசிரியராக இருந்து, பின்னாளில் அரசியலுக்கு வந்தார். 

முதல் தேர்தல்:

அரசியல் பின்னணி இல்லாவிட்டாலும் தனது 28-வது வயதில் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி தலைவரினால் அடையாளம் காணப்பட்டு 1967-ம் ஆண்டு ஜஸ்வந்த் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 

இளம் வயதிலேயே....:

இளம்வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்ற முலாயம் சிங், இதுவரை 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 1 முறை எம்.எல்.சி.யாகவும், மூன்று முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் அரசியல் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். 

சிறைவாசம்:

இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்ததன் விளைவாக 19 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 

பிரதமர் வாய்ப்பு:

இந்திய பிரதமராக இருந்த தேவகவுடா ராஜினாமா செய்ததையடுத்து முலாயம் சிங்குக்கு பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு இறுதி நேரத்தில் கைநழுவிப்போனது. 

பாபர் மசூதி ஆதரவு:

மேலும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார் முலாயம் சிங். பாபர் மசூதியின் அருகே பறவை கூட பறக்க முடியாது என கூறி இஸ்லாமிய மக்களுக்கு அரணாக விளங்கினார். 

சிகிச்சை:

82-வயதான முலாயம் சிங் உடல்நலக்குறைவு காரணமாக அரியானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் முலாயம் சிங் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com