எப்போதுமே செல்போன் பிஸி... கணவனின் நண்பனுடன் கல்யாணம்... 2 வது கணவனுக்கு தெரியாமல் 3வது லவ்வு!! க்ளைமேக்ஸில் கதம் கதம்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் ஒருவர் காதல் கணவனை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதுமே செல்போன் பிஸி... கணவனின் நண்பனுடன் கல்யாணம்... 2 வது கணவனுக்கு தெரியாமல் 3வது லவ்வு!! க்ளைமேக்ஸில் கதம் கதம்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் ஒருவர் காதல் கணவனை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த எழில்செல்வி என்பவர் நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சிவா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2-வயதில் கன்சிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், லாரி ஓட்டுநரான சிவா அடிக்கடி வெளியூருக்கு செல்லவேண்டி இருந்ததால், எழில் செல்வி தனிமையில் வாடினார். 


இதனை தெரிந்து கொண்ட சிவாவின் நண்பரான ஐயப்பன் என்பவர் அடிக்கடி எழில்செல்வியிடன் பேசி பழகியுள்ளார். ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்த நிலையில், காதல் கணவரான சிவாவை விட்டு விலகி வந்து ஐயப்பனை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார் எழில்செல்வி. இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த சிவா  தனது சொந்த ஊரை விட்டு தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்று லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.


இந்த நிலையில் தான் கடந்த மூன்றாம் தேதி இரவு எழில்செல்விக்கு உடல்நலக்கோளாறு ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார் ஐயப்பன். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.


பின்னர் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் எழில் செல்வியின் இரண்டாவது கணவன் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எழில்செல்வியின் செல்போன் அடிக்கடி பிஸியாக இருந்து வந்ததாகவும், வீட்டிற்கு வந்து பார்த்தால் செல்போனில் நம்பர் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த ஐயப்பன் ஆத்திரத்தில் எழில்செல்வியை கழுத்தை நெறித்து கொன்றது தெரியவந்தது. 


இதனையடுத்து போலீசார் ஐயப்பனை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்போனில் அதிகம் பேசிக்கொண்டிருந்ததால் காதல் மனைவியை 2வது கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விஷயமறிந்த எழில்செல்வியின் முதல் கணவரான சிவா, போலீசாரிடம் இருந்த அவரது இரண்டு வயது மகளை அழைத்துச்சென்றார்.