மீண்டும் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை...

மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்து அதனை அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தை...

ராஜஸ்தான் | தொடர்ந்து பல பள்ளி மாணவிகள் கர்ப்பம் தரித்து குழந்தைகள் பெற்றெடுக்கும் கொடூர சம்பவங்களைத் தாண்டி, அந்த பச்சிளம் குழந்தைகளை ஆங்காங்கே தூக்கிப் போட்டு போகும் அவலங்கள் அவ்வபோது அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், தற்போது மேலும் ஒரு மாணவி, பள்ளி வளாகத்திலேயே குழந்தை பெற்றெடுத்து அதனை அங்கேயே கைவிட்டுச் சென்றுள்ளார். திடீரென கேட்ட குழந்தையின் அலறல் சத்தத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்வு உருவாகியுள்ளது.

பள்ளிக் கழிவறையில் மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிண்டி மாவட்டத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

மேலும் படிக்க | அரசுப்பள்ளிக் கழிவறையில் தண்ணீர் வராததால் மாணவர்கள் அவதி : நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்?

விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தது தெரிய வந்தது. மேலும், பள்ளிக் கழிவறையில் பிள்ளை பெற்றதாக மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளில், தனது கிராமத்திலேயே வாழ்ந்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் அந்த பெண்ணைத் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கர்ப்பம் தரிக்க வைத்துள்ளார் என்றும், கிராமத்தாருக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதற்காக இதனை மறைத்து செய்ததாகவும் அந்த சிறுமி தகவலளித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | வீடியோவில் இருந்தால் நிரூபிக்க படாது!- சிறுமியின் வைரல் வீடியோ குறித்து காவலர்கள் கருத்து!